சுமார் 50 வருடங்களுக்கு முன் வையம்பட்டி பஞ்சாயத்து,காந்திநகர் மேல்புறம் உள்ள "மொட்டை கரடு" குன்றில் .... திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமி அவர்களால் "குமரகிரி" என நாம கரணம் சூட்டி அடிக்கல் நாட்டியது அனைவரும் அறிந்ததே.
அரை நூற்றாண்டு காலம் குமரகிரி முருகன் கோவில் கட்டுமானப்பணி நடக்காத நிலையில்... நான் பஞ்சாயத்து தலைவராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு வையம்பட்டி சுற்றுப்பகுதி மக்களின் ஆன்மீக உணர்வுகளை புரிந்து கொண்டு... இம்மக்களின் மன உணர்வுகளுக்கு மறு உருவம் கொடுக்கும் விதமாக... இந்த குமரகிரி முருகன் கோவில் கட்டுமானப் பணியினை மேற்கொள்ள மனநிறைவோடு பொறுப்பு ஏற்றுக்கொண்டேன்.
நம் பகுதி குமரகிரியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு குமரகிரி முருகப்பெருமான் ஆலயத் திருப்பணி மெய்யன்பர்களின் பங்களிப்போடும், குமரகிரியான் அருளாசியுடனும் 03.10.2021 முதல் பல சிரமங்களுக்கு இடையேயும் அயராத தொடர் முயற்சியால்வெகுசிறப்பாகநடைபெற்றுவருகிறது.
இதுவரை கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டப கட்டிட பணிகள் மட்டும் முடிவுற்று இருக்கின்றன.
நடைபாதை படி கட்டுவதற்கும், மண்டபம் கட்டுவதற்கும், மரக்கன்றுகள் நடுவதற்கும், சோலார் லைட் அமைப்பதற்கும், முன் பதிவு நடைபெற்று கொண்டு இருக்கிறது. நன்கொடை வழங்குபவர்கள் பெய
Ac Name: Kumaragiri Murugan Trust,
Savings Account No: 052001000008037,
IFSC Code: IOBA0000520

தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர்

அறங்காவலர்

அறங்காவலர்

அறங்காவலர்

அறங்காவலர்

அறங்காவலர்